திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மற்றவர்கள் சொல்வதையே சொல்லியிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவாலும்

தேர்தல் என்றால் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதும், தங்கள் கட்சிகளைப் பற்றி புகழ்வதும் இயற்கைதான். இதையே தான் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் செய்வார்கள்.

News image

கோப்புப்படம்

Updated On :10 மே 2019, 6:29 am


புது தில்லி: தேர்தல் என்றால் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதும், தங்கள் கட்சிகளைப் பற்றி புகழ்வதும் இயற்கைதான். இதையே தான் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் செய்வார்கள்.

அதிலும் சில அரசியல்வாதிகள் ஒரே விஷயத்தையே சொல்லும் போது அது சில சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.

அந்த வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று தில்லியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், வாக்களிக்க எந்தக் கட்சி வேட்பாளரும் பணமோ பொருளோ கொடுத்தால் அதை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கே வாக்களியுங்கள் எனறு கூறியுள்ளார்.

பணத்தையும் பரிசு பொருளையும் ஏன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன் என்றால், எல்லாமே உங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டதுதான் என்று கூறினார்.

கடந்த மாதமும் அரவிந்த் கேஜ்ரிவால் இதேப் போன்று பேசியதற்காக தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸை பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.