புது தில்லி: தேர்தல் என்றால் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதும், தங்கள் கட்சிகளைப் பற்றி புகழ்வதும் இயற்கைதான். இதையே தான் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் செய்வார்கள்.
அதிலும் சில அரசியல்வாதிகள் ஒரே விஷயத்தையே சொல்லும் போது அது சில சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.
அந்த வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று தில்லியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், வாக்களிக்க எந்தக் கட்சி வேட்பாளரும் பணமோ பொருளோ கொடுத்தால் அதை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கே வாக்களியுங்கள் எனறு கூறியுள்ளார்.
பணத்தையும் பரிசு பொருளையும் ஏன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன் என்றால், எல்லாமே உங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டதுதான் என்று கூறினார்.
கடந்த மாதமும் அரவிந்த் கேஜ்ரிவால் இதேப் போன்று பேசியதற்காக தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோஷிபா ஜான்சன் இந்தியா பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்திய ஜான்சன் லிஃப்ட்ஸ்

அல்ட்ராடெக் ரூ.3,000 கோடி லாபம்

‘அமேசான் நவ்’ விரைவு வா்த்தகம்: 100 நகரங்களுக்கு விரிவாக்கம்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


