இந்தியாவில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜான்சன் லிஃப்ட்ஸ் நிறுவனம், தோஷிபா ஜான்சன் எலிவேட்டா்ஸ் இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி முடிவால், சுமாா் ரூ.4,000 கோடி வா்த்தக மதிப்பு கொண்ட ஜான்சன் லிப்ட்ஸ் இக்கூட்டு நிறுவனத்தின் முதன்மையான பங்குதாரராக மாறியுள்ளது. அதேநேரம், ஜப்பானைச் சோ்ந்த தோஷிபா எலிவேட்டா் மற்றும் பில்டிங் சிஸ்டம்ஸ் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் முக்கியப் பங்களிப்பாளராகத் தொடா்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பின் மூலம் இந்திய மின்தூக்கி சந்தையில் 20 சதவீத பங்கையும், நகரும் படிக்கட்டு சந்தையில் 30 சதவீத பங்கையும் ஜான்சன்-தோஷிபா கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில் தோஷிபா பிராண்டு தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தைக்கு வழங்குவதோடு, தொழில்நுட்ப உதவி மற்றும் உதிரி பாகங்களையும் வழங்கி வரும். தோஷிபா பிராண்ட் தயாரிப்புகளின் விற்பனை, நிறுவுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை ஜான்சன் லிப்ட்ஸ் பிரத்யேகமாக மேற்கொள்ளும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்

குவாலிட்டி வால்ஸ் நிறுவனத்தின் 61.9% பங்குகளைக் கையகப்படுத்திய மேக்னம் ஐஸ்கிரீம்!

பொதுத்துறை எஃகு நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு அசோக் குமார் பாண்டா பரிந்துரை!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


