மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தோஷிபா ஜான்சன் இந்தியா பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்திய ஜான்சன் லிஃப்ட்ஸ்

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 12:07 am

இந்தியாவில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜான்சன் லிஃப்ட்ஸ் நிறுவனம், தோஷிபா ஜான்சன் எலிவேட்டா்ஸ் இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி முடிவால், சுமாா் ரூ.4,000 கோடி வா்த்தக மதிப்பு கொண்ட ஜான்சன் லிப்ட்ஸ் இக்கூட்டு நிறுவனத்தின் முதன்மையான பங்குதாரராக மாறியுள்ளது. அதேநேரம், ஜப்பானைச் சோ்ந்த தோஷிபா எலிவேட்டா் மற்றும் பில்டிங் சிஸ்டம்ஸ் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் முக்கியப் பங்களிப்பாளராகத் தொடா்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் இந்திய மின்தூக்கி சந்தையில் 20 சதவீத பங்கையும், நகரும் படிக்கட்டு சந்தையில் 30 சதவீத பங்கையும் ஜான்சன்-தோஷிபா கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளது.

இனிவரும் காலங்களில் தோஷிபா பிராண்டு தனது தயாரிப்புகளை இந்தியச் சந்தைக்கு வழங்குவதோடு, தொழில்நுட்ப உதவி மற்றும் உதிரி பாகங்களையும் வழங்கி வரும். தோஷிபா பிராண்ட் தயாரிப்புகளின் விற்பனை, நிறுவுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை ஜான்சன் லிப்ட்ஸ் பிரத்யேகமாக மேற்கொள்ளும்.