மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக வேண்டுமென்றே வெறுப்புணர்வை தூண்டுவதாக உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக லக்னோவில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மேலும் கூறியதாவது:
நடப்பு தேர்தல் ஆணையர் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுவது மேற்கு வங்க விவகாரம் மூலம் அம்பலமாகியுள்ளது. நாடு முழுவதிலும் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் செயல்படாமல் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தன்மீதான தவறுகளை மறைப்பதற்காகவே மேற்கு வங்கத்தில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை கட்டவிழ்த்துள்ளார். மோடி கலந்துகொள்ளும் பிரசாரங்கள் இருப்பதாலேயே மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு இரவு வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் காலை முதலே பிரசாரங்களை முடக்கியிருக்க வாய்ப்புள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மூலம் பாஜக வெறுப்புணர்வை தூண்டுகிறது என்று குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்ட்ராடெக் ரூ.3,000 கோடி லாபம்

‘அமேசான் நவ்’ விரைவு வா்த்தகம்: 100 நகரங்களுக்கு விரிவாக்கம்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

தொடா் சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


