கேதார்நாத் குகைக் கோயிலில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், கேதார்நாத் கோயிலுக்குச் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கேதார்நாத் குகைக் கோயிலில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி
Updated on
1 min read


மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், கேதார்நாத் கோயிலுக்குச் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஓயாமல் ஓடி ஓடி பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, நாளை தான் போட்டியிடும் வாராணசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று காலை கேதார்நாத் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பிறகு கேதார்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.

அதன் பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகைக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்த குகையில் அமர்ந்து தியானம் செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com