அதனை அறிந்தவுடன் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன: கிரிராஜ் சிங்

ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். 
அதனை அறிந்தவுடன் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன: கிரிராஜ் சிங்
Published on
Updated on
1 min read

ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு என ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை அறிந்தவுடன் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

எனவே மே 23-ஆம் தேதிக்கு பிறகு தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து இவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com