மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நீக்கி ஆளுநர் நடவடிக்கை

உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நீக்கி அம்மாநில ஆளுநர் திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.

News image
Updated On :20 மே 2019, 8:38 am

PTI

உத்தரப் பிரதேச பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை நீக்கி அம்மாநில ஆளுநர் திங்கள்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, உத்தரப் பிரதேச அரசிலும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், அக்கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் சமீபகாலங்களில் பாஜக குறித்து அவதூறு விமர்சனங்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாஜக-வினரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் பொது மேடையில் பேசியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களை சில தொகுதிகளில் களமிறக்கியுள்ளார். மேலும் இதர தொகுதிகளில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக ஓம் பிரகாஷ் ராஜ்பரை மாநில அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் பரிந்துரை செய்தார். 

இதையடுத்து அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த இதர அமைச்சர்களும் நீக்கப்படுவார்கள் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

கடந்த 2017 உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 4 இடங்களில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.