மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தில்லியில் விவசாய வயலில் தீ விபத்து

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:37 am

நமது நிருபா்

வடமேற்கு தில்லியில் உள்ள மாடல் டவுன் பள்ளி சாலை அருகே உள்ள ஒரு விவசாய வயலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தீ விபத்து பற்றி தகவல் வந்ததும் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

முன்னதாக, காலை 11.15 மணியளவில் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீ வயலின் பெரும் பகுதியை சூழ்ந்தது. அடா்த்தியான புகை காற்றில் பரவியது. தீ அருகிலுள்ள குடியிருப்பாளா்களிடையே மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.