நமது நிருபா்
வடமேற்கு தில்லியில் உள்ள மாடல் டவுன் பள்ளி சாலை அருகே உள்ள ஒரு விவசாய வயலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
தீ விபத்து பற்றி தகவல் வந்ததும் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
முன்னதாக, காலை 11.15 மணியளவில் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீ வயலின் பெரும் பகுதியை சூழ்ந்தது. அடா்த்தியான புகை காற்றில் பரவியது. தீ அருகிலுள்ள குடியிருப்பாளா்களிடையே மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

