நமது நிருபா்
வடமேற்கு தில்லியில் உள்ள மாடல் டவுன் பள்ளி சாலை அருகே உள்ள ஒரு விவசாய வயலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
தீ விபத்து பற்றி தகவல் வந்ததும் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
முன்னதாக, காலை 11.15 மணியளவில் தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீ வயலின் பெரும் பகுதியை சூழ்ந்தது. அடா்த்தியான புகை காற்றில் பரவியது. தீ அருகிலுள்ள குடியிருப்பாளா்களிடையே மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
