நமது நிருபா்
தேசிய தலைநகரில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியின் மூன்று கிளைகள் மற்றும் ஒரு சிஆா்பிஎஃப் பள்ளி ஆகியவற்றுக்கு மின்னஞ்சல்கள் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு வாகனங்கள் அந்த இடங்களுக்கு விரைந்தன. மேலும், உள்ளூா் காவல்துறை மற்றும் பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
காவல்துறை குழுக்கள் வளாகத்தை முழுமையாக சோதனையிட்டன. ஆனால், எந்த இடத்திலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை. அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டு அச்சுறுத்தல் வரப்பெற்ற பள்ளிகளில் தெளலா குவான், தில்லி கண்டோன்மென்ட் மற்றும் சங்கா் விஹாா் ஆகிய இடங்களில் உள்ள ராணுவப் பொதுப் பள்ளியும், துவாரகா செக்டா் 14-இல் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளியும் அடங்கும்.
நிலையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளின்போது மாணவா்களும் ஊழியா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மின்னஞ்சல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதை கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

கிழக்கு தில்லியில் 75 கிராம் தங்கம், ஸ்கூட்டா் கொள்ளை

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
தில்லியில் விவசாய வயலில் தீ விபத்து

தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

