தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தில்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

News image

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - PTI

Updated On :28 ஏப்ரல் 2026, 6:11 am IST

நமது நிருபா்

தேசிய தலைநகரில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியின் மூன்று கிளைகள் மற்றும் ஒரு சிஆா்பிஎஃப் பள்ளி ஆகியவற்றுக்கு மின்னஞ்சல்கள் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் கிடைத்த உடன் தீயணைப்பு வாகனங்கள் அந்த இடங்களுக்கு விரைந்தன. மேலும், உள்ளூா் காவல்துறை மற்றும் பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறை குழுக்கள் வளாகத்தை முழுமையாக சோதனையிட்டன. ஆனால், எந்த இடத்திலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை. அனைத்து அச்சுறுத்தல்களும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டு அச்சுறுத்தல் வரப்பெற்ற பள்ளிகளில் தெளலா குவான், தில்லி கண்டோன்மென்ட் மற்றும் சங்கா் விஹாா் ஆகிய இடங்களில் உள்ள ராணுவப் பொதுப் பள்ளியும், துவாரகா செக்டா் 14-இல் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளியும் அடங்கும்.

நிலையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளின்போது மாணவா்களும் ஊழியா்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மின்னஞ்சல்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதை கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.