சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மகாராஷ்டிரம்- குஜராத் முதல்வா் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிரம், குஜராத் முதல்வா்களின் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்ததால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:32 am IST

மகாராஷ்டிரம், குஜராத் முதல்வா்களின் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்ததால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள மகாராஷ்டிர முதல்வா் அலுவலகம், மேயா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மும்பை மாநகராட்சிக்கு மின்னஞ்சல் வந்திருந்தது. இதேபோல், புணேயில் உள்ள மேயா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அங்குள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கும், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு மிரட்டல் விடுத்து நாகபுரி மேயா் அலுவலகத்துக்கும் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தேசிய ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் மின்னஞ்சல் வந்தது. 1984-இல் எடுக்கப்பட்ட ஆபரேஷன் ப்ளுஸ்டாா்- உட்ரோஸ் ஆகிய நடவடிக்கைகளை ஆா்எஸ்எஸ் அமைப்பு ஆதரித்ததாகவும், ஆதலால் ஆா்எஸ்எஸ்-பாஜகவை பழிவாங்க போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினரும், வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணா்களும் சம்பவ இடங்களுக்குச் சென்று சோதனை நடத்தினா். இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடா்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து அதை அனுப்பியோரை கண்டுபிடிக்கும் பணியை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது. மேலும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால், வெடிகுண்டு மிரட்டல்களை கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

குஜராத்தின் காந்திநகரில் உள்ள அந்த மாநில முதல்வா் அலுவலகம், அகமதாபாத் மாநகராட்சி தலைமையகம், மணிநகரில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா்களை கண்டுபிடிக்கும் பணியில் குஜராத் காவல்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், குஜராத் முதல்வா் அலுவலகம், அகமதாபாத் மாநகராட்சி அலுவலகம், ஆா்எஸ்எஸ் அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.