உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 4 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் வந்தது.
உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆட்சியரின் முகாம் அலுவலகம், ஃபிங்கா்போஸ்ட்டில் உள்ள புதிய ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி வியாழக்கிழமை வந்தது.
இது குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் அடிப்படையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அங்குள்ள அனைத்து அறைகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதேபோல, ஆட்சியரின் முகாம் அலுவலகம், புதிய ஆட்சியா் அலுவலகம் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியிலும் சோதனை நடைபெற்றன. சுமாா் 2 மணி நேர தீவிர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இருப்பினும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸாா், சைபா் கிரைம் காவல் துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு 4-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



