போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அதிநவீன ஹாக் ஜெட் போர் விமானங்களை இயக்கும் முதல் இந்திய பெண் விமானி 

அதிநவீன ஹாக் ஜெட் போர் விமானங்களை இயக்கும் முதல் இந்திய பெண் விமானியாக பிளைட் லெப்டினன்ட் மோஹனா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:32 pm IST

புது தில்லி: அதிநவீன ஹாக் ஜெட் போர் விமானங்களை இயக்கும் முதல் இந்திய பெண் விமானியாக பிளைட் லெப்டினன்ட் மோஹனா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய விமானப் படை வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளைட் லெப்டினன்ட் அலுவலர்களான பாவனா காந்த், அவனி சதுர்வேதி மற்றும் மோஹனா சிங் ஆகிய மூவரும் 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் போர் விமான பயிற்சிக்கான அணியில் சேர்க்கப்பட்டனர்.

கடும் பயிற்சிகளுக்குப் பிறகு கடந்த வாரம் பாவனா காந்த் மிக் 21 -பைசன் ரக விமானங்களை இயக்கும் பன்னிக்குத் தேர்வானார்.       

தற்போது அதிநவீன ஹாக் ஜெட் போர் விமானங்களை இயக்கும் முதல் இந்திய பெண் விமானியாக பிளைட் லெப்டினன்ட் மோஹனா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மோஹனா சிங்கின் பயிற்சிகளில் வானத்தில் இருந்து வானில் இலக்குகளைத் தாக்குதல் மற்றும் வானில் இருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்குதல் உள்ளிட்டவையும் அடங்கும்.

அத்துடன் விமானத்தில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுதல், துப்பாக்கியால் சுடுதல் மற்றும் அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை வீசுதல் உள்ளிட்ட பயிற்சிகளையும் மோஹனா மேற்கொண்டுள்ளார்.

அவர் இதுவரை மொத்தமாக எந்த தவறுகளும் இல்லாமல் 500 மணி நேரங்கள் வானில் பறந்துள்ளார். அதில் 380 மணி நேரங்கள் அதிநவீன ஹாக் Mk 123 ஜெட் போர் விமானத்தில் பறந்ததும் அடங்கும்.   

இறுதியாக மேற்கு வங்கத்தில் உள்ள கலைக்குண்டா விமான தளத்தில் கடினமான நான்கு தொடர் விமான பறக்கும் பயிற்சிகளுக்குப் பின்னர் அவர் அதிகாரப்பூர்வமாக  போர் விமானியாக அறிவிக்கப்பட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.