உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் நீதிமன்றம், அந்த இடத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-இல் தீா்ப்பளித்தது.
அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வருகிறது. வழக்கின் தங்கள் வாதங்களை அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திட்டமிட்டதை விட ஒரு நாள் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இவ்வழக்கு தொடர்பான முழு விசாரணையும் முடிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
அயோத்தி வழக்கு இறுதிகட்ட விசாரணை 40-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில் இனி எவ்வித இடைக்கால விசாரணை மனுக்கள் மீதும் அனுமதி கிடையாது. அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்ட காரணத்தால், அக். 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வழக்கு மீதான விசாரணை முடிவு பெறுகிறது என்று தெரிவித்தார்.
டிசம்பர் 10-ஆம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.