மஹாராஷ்டிரத்தில் 90 நாய்கள் திடீர் மரணம்

மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 90 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 90 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கிர்தா-சவல்தப்ரா சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அங்கு வனத்துறை சோதனை நடத்தியது.

அப்போது சுமார் 90 நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ததன் முடிவில், அவை பல நாட்கள் உணவின்றியும், அடித்து-துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com