நீதிமன்றங்கள் மறுப்பு: இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ராஜீவ் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க இரு நீதிமன்றங்கள் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டன.
வடக்கு 24 பர்கனா மாவட்டம், பரசாத் நகரிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், ராஜீவ் குமார் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறிவிட்ட சிறப்பு நீதிபதி சஞ்சீவ் தலுக்தார், செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பரசாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராஜீவ் குமார் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு, தெற்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி ரஷீதி, அவரது மனுவை பரிசீலிக்க மறுத்துவிட்டார்.