தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு வேலைவாய்ப்பு: முற்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு கோரி பொது நல மனு தாக்கல்

அனைத்து அரசு வேலைகளுக்கான ஆள்தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பை தளர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :19 செப்டம்பர் 2019, 7:58 pm

DIN


அனைத்து அரசு வேலைகளுக்கான ஆள்தேர்வில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பை தளர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மகாளிபட்டியைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சார்பில் வழக்குரைஞர் சி.ஆர். ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 
பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வேலைவாய்ப்புத் தேர்வில் அந்தப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு ஏதும் செய்யாதது இந்திய அரசியல் அமைப்புக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானதாகும். 
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான தேர்வில், பலமுறை தேர்வில் பங்கேற்கவும், வயது வரம்பில் தளர்வையும் பெறுகின்றனர்.  அதேவேளையில், இந்த ஆண்டு பொருளாதாரத்தில் முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்த போது, அதுபோன்ற வயது தளர்வு வழங்கப்படவில்லை. 
மேலும், சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் வெற்றி பெற ஒபிசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். 9 முறை இத்தேர்வை எழுதலாம். பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 32 ஆகும். 
எனினும், 6 முறை மட்டுமே எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எஸ்சி, எஸ்டி வகுப்பு தேர்வர்கள் அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகவும், எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் எனவும் விதி உள்ளது.  ஆனால், 10 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பில் இதுபோன்ற வயது வரம்பில் தளர்வுகள் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்படவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்தின் 21- ஷரத்துக்கு எதிராக உள்ளது. 
எனவே, பிற பிரிவினருக்கு அளிக்கப்படுவது போல பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கும் அனைத்து அரசு வேலைத் தேர்விலும் வயது வரம்பு தளர்வை அளிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.