ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கால் டாக்சிகளில் ஆணுறை இல்லையென்றால் அபராதம் விதிக்கும் டெல்லி போலீசார்; புலம்பும் டிரைவர்கள்!

டெல்லியில் கால் டாக்சிகளில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை இல்லையென்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக கால் டாக்சி டிரைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

News image
Updated On :22 செப்டம்பர் 2019, 2:36 pm IST

டெல்லியில் கால் டாக்சிகளில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை இல்லையென்றால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக கால் டாக்சி டிரைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

திருத்தப்பட்ட மோட்டர் வாகனச் சட்டம், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி, அனைத்துப் பகுதிகளிலுமே போக்குவரத்து போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. 

அவ்வாறே, டெல்லியிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கால் டாக்சிகளில் சோதனை மேற்கொள்ளும் போலீசார், முதலுதவிப் பெட்டியில் ஆணுறை இல்லையென்றால் அதற்கு அபராதம் விதிக்கின்றனர். 

ஆனால், மோட்டார் வாகனச் சட்டத்தில் கார்களில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. மேலும், கார்களில் ஏன் ஆணுறை வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட போக்குவரத்து போலீசாருக்கு இல்லை என்று கூறுகின்றனர் டெல்லி கால் டாக்சி டிரைவர்கள். 

காரின் குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டாலோ, விபத்துகளில் யாருக்கேனும் அடிபட்டு ரத்தம் கசிந்தாலோ அதனை தடுத்து நிறுத்த ஆணுறை பயன்படுத்துகிறது. மழைக்காலங்களில் ஷூக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது. பாதுகாப்பான உடலுறவுக்கு மட்டுமல்ல; இதுபோன்ற பிரச்சனைகளிலும் ஆணுறை உதவுகிறது என்று தெரிவித்தனர்.

சட்டத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் கால் டாக்சியில் ஆணுறை இருப்பது அவசியமானது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்ததால், அதனை வைத்து அபராதம் விதிப்பதாக டிரைவர்கள் புலம்புகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.