நரேந்திர மோடி ஒன்றும் சர்வ வல்லமை படைத்தவர் கிடையாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆவேசமாக தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா, ரே பரேலி தொகுதியில் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனிருந்தார். இந்நிலையில், அவர் பேசியதாவது:
கடந்த காலங்களில் பலர் தங்களை சர்வ வல்லமை படைத்தவராக நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், வரலாறு வேறு மாதிரியாக அமைந்தது. அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் தன்னை சர்வ வல்லமை படைத்தவராக கருதுகிறார். ஆனால், மக்களவைத் தேர்தல் முடந்தவுடன் அதன் உண்மை நிலை தெரிந்துவிடும்.
காங்கிரஸ் மீது தேவையற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை மோடி முன்வைக்கிறார். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக என் மீது நடவடிக்கை எடுத்தாலும், என்னை கைது செய்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நான் எழுப்பிய அந்த 4 கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கச் சொல்லுங்கள்.
ஒருவேளை என்னுடன் விவாதிக்க தயார் என்றால், மோடியால் எனது கண்களை கூட பார்க்க முடியாது. ரஃபேல் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் ஏன் விசாரிக்கிறது என்பதையாவது பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!

மத்திய பிரதேச கல்வி சமூக அலுவலகத்தில் சோதனை: நகை, ரொக்கம் பறிமுதல்!

வீழ்ச்சியடையும் தேங்காய் விலை! அரசு என்ன செய்யப் போகிறது?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



