காங்கிரஸ் ஆட்சியில் 6 துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா, அதனை பட்டியலிட்டு கூறியதாவது:
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் 6 துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பட்டல் பகுதியில் முதல் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதிகளில் நீலம் நதிக்கரைப் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள ஷர்தா எனுமிடத்தில் 2-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2013-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி சாவன் பத்ரா சோதனைச் சாவடி அருகில் 3-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2013-ஆம் ஆண்டு ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நசபிர் பகுதியில் 4-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு 6-ஆம் தேதி நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் 5-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
2014-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி 6-ஆவது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.