ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ராகுல் பேச்சுக்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா தாக்கு 

ராகுல் காந்தியின் பேச்சுக்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:28 pm IST

தாதர்-நகர் ஹாவேலி ராகுல் காந்தியின் பேச்சுக்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

யூனியன் பிரதேசமான தாதர் மற்றும் நகர் ஹாவேலியில் உள்ள சில்வாஸா நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, ஞாயிறன்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா சென்றிருந்தார்.

அங்கே பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்த பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ பிரதமர் மோடி அரசு நீக்கியதை மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதனை எதிர்த்து வருகிறது.

இதுதொடர்பாக ராகுல் காந்தி என்ன பேசினாலும் அதை பாகிஸ்தான் புகழ்ந்கிறது. ஐ.நா.வில் பாகிஸ்தான் அளித்த கடிதத்தில் கூட ராகுல் காந்தியின் பேச்சுதான் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கும் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சிதான் வெட்கப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு  370 ஐ திரும்பப் பெற்ற துணிச்சலான முடிவை பிரதமர் மோடியைத் தவிர வேறுயாரும் செய்ய முடியாது. கடந்த 70 ஆண்டுகளில் பலர் நாட்டின் தலைவர்களாக வந்துள்ளார்கள். ஆனால் யாருமே அதை நீக்க முடியவில்லை. இந்த ஒரு  விஷயத்துக்காக பிரதமர் மோடியை மக்கள் ஆசிர்வதிக்கிறார்கள்

அந்தப் பிரிவு நீக்கப்பட்ட நாளில் இருந்து, ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது இதுவரை ஒரு துப்பாக்கி குண்டு கூட பாயவில்லை. ஆனாஉலகத்துக்கும், நாட்டுக்கும் சொல்கிறேன், காஷ்மீர் முழுமையாக அமைதியாக இருக்கிறது. இதுவரை அங்கு ஒருவர் கூட பலியாகவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.