புது தில்லி: கரோனா தொற்று பாதித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்களிடம் எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளை கோவாவில் இருந்து புணேவுக்கு எடுத்துச் செல்லும் சேவையை இந்திய கடற்படை ஆற்றி வருகிறது.
இந்திய கடற்படையைச் சேர்ந்த டோர்னியர் ரக விமானம் மூலம், கோவாவின் ஐஎன்எஸ் ஹன்ஸா கடற்படை விமான தளத்தில் இருந்து நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கொண்டு வந்த 38 பேரின் மருத்துவப் பரிசோதனை மாதிரிகள், புணேவுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
கோவா உள்துறை அமைச்சக செயலாளர் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய கடற்படை இப்பணியை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக இதே கடற்படை விமானம் மூலம் மார்ச் 25-ம் தேதி கோவாவைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள், கரோனா மருத்துவப் பரிசோதனைகளுக்கான பயிற்சி பெற புணேவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிசாவில் வெப்பத் தாக்குதலுக்கு இரு ஆசிரியர்கள் பலி!

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

இன்று முதல் ஒளிபரப்பாகும் தாய் மாமன் சீரியல்! தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
மே 4-க்குப் பிறகு பாஜக பதவியேற்பு விழாவுக்கு வருவேன்! மேற்குவங்கத்தில் மோடி பேச்சு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


