போபால்: தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததைதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் தனது செல்போனையே அணைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கடந்த நான்கைந்து நாட்களாக தொல்லைப்படுத்தும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதுபற்றி மாநில டிஜிபி மற்றும் அலைபேசி நிறுவனத்திடம் புகார் அளித்தும் பயனில்லை. எனவே நான் எனது அலைபேசியை அணைத்து வைத்து ட்டேன். ஆனால் என்னை போபாலில் உள்ள எனது வீட்டு லேண்ட்லைன் எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த நான்கைந்து நாட்களாக தொடர்பில்லாத நபர்கள் அவரை அலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசுவதால்தான் அவர் இந்த முடிவு எடுத்துள்ளார் என்று திக்விஜய் சிங்கிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கன் புலாவ், தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கருப்பு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும்: சாய் அபயங்கர்

உக்ரைன் போர்: ரஷிய ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கிம்!

சுழன்று அடித்த திடீர் சுழல் காற்று! அலறியடித்து ஓடிய விளையாட்டு வீரர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


