

ஆக்ராவில் கரோனாவுக்கு முதல் பலி; உத்தரப்பிரதேசத்தில் பலி 4 ஆனது
லக்னௌ: ஆக்ராவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை உயிரிழந்ததை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்ந்துள்ளது. இதில், தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 187 பேர் ஆவர்.
கரோனா பாதித்து ஆக்ராவில் உள்ள எஸ்என் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது பெண்மணி இன்று உயிரிழந்தார். அவர் கம்காநகரைச் சேர்ந்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.