அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

குஜராத்தில் ஒரே நாளில் கரோனாவுக்கு 7 பேர் பலி

குஜராத்தில் நேற்று மாலை 6 மணி முதல் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 5:39 am

குஜராத்தில் நேற்று மாலை 6 மணி முதல் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலில், குஜராத்தில் ஒரே நாளில் புதிதாக 176 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆகமதாபாத்தில் 143 பேரும், சூரத்தில் 13 பேரும், வதோராவில் 13 பேரும் அடங்குவர்.

இதனால் குஜராத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.