இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நோய்த்தொற்றுக்கு 775 பேர் பலியாகியுள்ளனர்.
மத்தியு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சனிக்கிழமை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,425 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 -இல் இருந்து 24,506 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது 18,668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புள்ளவர்களின் எண்ணிக்கை 4,813-இல் இருந்து 5,063-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு தொற்று பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை 6,817 ஆகவும், பலி எண்ணிக்கை 301- ஆகவும் உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக குஜராத்தில் 2,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 127 பேர் உயிரிழந்துள்ளனர், தலைநகர் தில்லியில் 2,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அதிகபட்சமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.