மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் தேவையில்லை: மன்மோகன்

அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 7:01 am

அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவு பற்றிக் கவலை தெரிவித்த மன்மோகன், அரசு ஊழியர்களின் மீது இத்தனை கஷ்டங்களைத் திணிக்க வேண்டியதில்லை என்றார்.

தற்போதைய சூழ்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவத்தினர் மீது இத்தகைய கடினமான நிலையைத் திணிப்பதைத் தாம் உண்மையிலேயே அவசியம் எனக் கருதவில்லை என்று டிவிட்டரில் வெளியிட்ட விடியோ செய்தியொன்றில் மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.