விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேதார்நாத் கோயில் நடை இன்று மீண்டும் திறப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் இன்று காலை மீண்டும் நடை திறக்கப்பட்டது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 7:07 am

ருத்ரபிரயாக்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் இன்று காலை மீண்டும் நடை திறக்கப்பட்டது. 

புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் கடந்த 6 மாதமாக நடை சாத்தப்பட்டிருந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. சுமார் 10 குவிண்டால் சாமந்தி, ரோஜா மற்றும் பிற மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு ருத்ராபிஷேக பூஜை நடத்தப்பட்டது. கோயிலின் நடை திறக்கப்பட்டதும் முதல் பூஜையாக பிரதமர் மோடியின் சார்பில் பூஜைகள் நடத்தப்பட்டன. 

கரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.