விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனா நோயாளிகளின் தனிமையைப் போக்க மேற்கு வங்க மருத்துவமனையில் புதிய திட்டம்

கரோனா நோயாளிகள் சந்திக்கும் பல பிரச்சினைகளில் தனிமையும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க மேற்கு வங்க மருத்துவமனையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 12:09 pm


கரோனா நோயாளிகள் சந்திக்கும் பல பிரச்சினைகளில் தனிமையும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதனைத் தவிர்க்க மேற்கு வங்க மருத்துவமனையில் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில், கரோனா பாதித்த நோயாளிகளின் உறவினர்களுடன் ஐபேட் மூலம் பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனையின் நிர்வாகி இது பற்றி கூறுகையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுக்குள் செல்லிடப்பேசிகளைக் கொண்டு செல்லக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, நாங்கள் நோயாளிகளுடன், அவர்களது குடும்பத்தினர் பேசுவதற்கு 'ஐபேட்'ஐ பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நோயாளிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசி, தங்களது தனிமையை போக்கிக் கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.