விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்த ஆண்டு அமோக விளைச்சல்; ஆனால் குப்பையில் கொட்டுகிறோம்: பூ விவசாயி கண்ணீர்

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 7:23 am


இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு அமோகமாக விளைந்து, அதிக பூக்கள் பூத்துள்ளன. ஆனால் என்ன அனைத்தையும் பறித்து குப்பையில் கொட்டுகிறோம் என்று வருத்தத்தோடு கூறுகிறார் சட்டீஸ்கர் பூ விவசாயி.

Story image

சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த பூ விவசாயி சீமா, தனது குடும்பத்தினருடன், தினமும் விவசாய நிலத்துக்கு வந்து அழகழகாய் மலர்ந்திருக்கும் பூக்களை பறித்து அருகே இருக்கும் குப்பையில் கொட்டி வருகிறார். பூக்களை பறிக்காமல் விட்டுவிட்டால், செடியில் பூச்சி ஏற்பட்டுவிடும் என்று நாள்தோறும் கணவர் மற்றும் மகளுடன் பூக்களைப் பறித்து குப்பையில் கொட்டி வருகிறார்.

Story image

இது பற்றி அவர் கூறுகையில், தினமும் நாங்கள் இங்கு வந்து பூக்களை பறித்து குப்பையில் கொட்டுகிறோம். ஒரு வேளை இப்படி ஒரு சூழ்நிலை வராவிட்டால், நாங்கள் மிகப்பெரிய லாபத்தை பார்த்திருப்போம், ஏன் என்றால் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஏராளமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன என்கிறார் கண்ணீரோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.