டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோயில் பூமி பூஜையில் உமா பாரதி பங்கேற்கப்போவதில்லை

அயோத்தியாவில் நடைபெறும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ராமர்கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் உமா பாரதி பங்கேற்கவில்லை
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

ANI


போபால்: அயோத்தியாவில் நடைபெறும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பாஜக தேசிய துணைத் தலைவர் உமா பாரதி பங்கேற்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர்ஜென்ம பூமியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜையில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.  மேலும், நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு வேறொரு நாளில் பூமி பூஜை நடந்த இடத்துக்குச் செல்லவிருப்பதாகவும், கரோனா தொற்றுப் பரவல் காரணமாகவே தான் இந்த நிகழ்ச்சியை தவிர்த்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச பாஜக தலைவர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற செய்தியை கேட்டது முதலே நான் பூமி பூஜையில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அயோத்தியாவில் உள்ள மக்களின் நலன் குறித்து கவலை அடைந்தேன் என்று உமா பாரதி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க விருக்கிறாா்.

இந்நிலையில், ராமா் கோயில் கட்டுமானப்பணிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புனித மண் மற்றும் ஆற்றுநீா் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.