டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அடுத்தது காசி, மதுராதான் : கர்நாடக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு 

காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் கோவில்களுக்கு வழிவிடவேண்டும் என்று கர்நாடக மாநில அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது.

News image
கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் கோவில்களுக்கு வழிவிடவேண்டும் என்று கர்நாடக மாநில அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடத்தப்பட்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் கர்நாடகத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஊரகத் துறை அமைச்சராகவுள்ள கே.எஸ். ஈஸ்வரப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கர்நாடக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா, “அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளதன் மூலம் அடிமைத்தனம் துடைத்தெறியப்பட்டுள்ளது. அடுத்தது காசியும் மதுராவும்தான். அங்குள்ள மசூதிகள் கோவில்களுக்கு வழிவிட வேண்டும்” என்று சர்ச்சைக்குரிய வகையில்  கருத்துத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஈஸ்வரப்பாவின் கருத்து குறித்து கருத்து தெரிவிக்க காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.எல். சங்கர் மறுத்துவிட்டார். அவர் பேசும்போது, “இது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா அல்லது ஈஸ்வரப்பாவின் தனிப்பட்ட நிலைப்பாடா என்பது எங்களுக்குத் தெரியாது. இதுகுறித்து பாஜக ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே இந்த விஷயத்தில் நாங்கள் கருத்து தெரிவிப்போம்” என்றார். 

அயோத்தியில் ராமர் கோவிலின்  பூமி பூஜையை காங்கிரஸ் வரவேற்றுள்ளது, ஆனால் இந்த பிரச்னை, மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கப்  பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ‘அனைத்து காங்கிரஸ்காரர்களின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்’ என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் செவ்வாயன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.