தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? ஆய்வு

ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 16க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 21.2% பேருக்கு கடவுள் பக்தி அதிகரித்திருப்பதாகவும், 18.3% பேருக்கு சற்று கடவுள் பக்தி உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

News image
கரோனா காலத்தில் கடவுள் பக்தி உயர்ந்திருக்குமா? குறைந்திருக்குமா? ஆய்வு
Updated On :5 ஆகஸ்ட் 2020, 10:22 am

DIN

டேஹ்ராடூன்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 16க்கும் மேற்பட்ட மருத்துவ நிலையங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில், கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 21.2% பேருக்கு கடவுள் பக்தி அதிகரித்திருப்பதாகவும், 18.3% பேருக்கு சற்று கடவுள் பக்தி உயர்ந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 50% பேருக்கு கரோனா பேரிடர் காலத்திலும் தங்களது கடவுள் பக்தியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், 4.4% பேருக்கு சற்று நம்பிக்கைக் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த கரோனா காலத்தில் தங்களது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், உடற்பயிற்சி செய்வது, செல்லிடப்பேசியில் விளையாடுவது, உள்ளரங்க விளையாட்டு, புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, சமையல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்பாடுகளும் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் ஐந்தில் 2 பேருக்கு மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

கரோனாவால் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் எழுந்ததால், சில உறவுகளுடன் இருந்த மனக்கசப்புகள் அகன்று, உறவுகள் வலுப்படுத்தப்பட்டதாகவும், சின்னச் சின்ன வாக்குவாதங்களை தவிர்த்ததாகவும் சிலர் கருத்துகளை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.