சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Updated On :13 ஆகஸ்ட் 2020, 9:16 am

DIN

குஜராத்தில் அடுத்த 8 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று (புதன் கிழமை) மாநிலம் முழுவதும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மத்திய மற்று தெற்கு குஜராத், பஞ்ச்மஹால், வல்சாத், நவ்சாரி, சூரத், சோட்டா உதேபூர் மற்றும் நர்மதா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கனமழையால் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 14 குழுக்கள் மீட்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வரும் 21-ஆம் தேதி வரை 8 நாள்களுக்கு குஜராத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.