புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தில்லி நகரங்களில் உருவாகிவரும் காடுகள்: அமைச்சர் கோபால் ராய்

தில்லியில் 12 நகரங்களில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4 நகரங்களில் விரைவில் காடுகள் உருவாக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராவ் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப் படம்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 12:11 pm

DIN

தில்லியில் 12 நகரங்களில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4 நகரங்களில் விரைவில் காடுகள் உருவாக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராவ் தெரிவித்துள்ளார். 


மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தில்லி சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராவ், நாட்டின் தலைநகரான தில்லியில் உள்ள 12 நகரங்களில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் 5 நகரங்களில் உள்ள காடுகள் 10 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  நசிப்பூர் (28 ஹெக்டர்), அலிப்பூர் (19.50 ஹெக்டர்), தாஜ் என்கிளேவ் (56 ஹெக்டர்), மிட்ரோன் பாகெட் (35.15 ஹெக்டர்), ஹவுஸ் ராணி (28 ஹெக்டர்) ஆகிய பகுதிகளில் காடுகள் அமைக்கப்பட்டுள்ளன.  

மேலும் நான்கு நகரங்களில் காடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாமூர்பூர், அய்நகர், ஜான்பூர் மற்றும் தேரா மண்டி ஆகிய பகுதிகளில் காடுகள் உருவாக்கும் பணி விரைவில் முடிவடையும் என்று கூறினார்.

தில்லியில் மாசுபாட்டை குறைக்கும் வகையில், தில்லி சுற்றுச்சூழல் நலத்துறை, மத்திய அரசுடனும், அண்டை மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கோபால் ராவ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.