மறைந்த முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவரின் பெயர் சாலைக்குச் சூட்டப்படும் என உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான சேத்தன் சவுகான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் சேத்தன் சவுகானை நினைவுகூறும் வகையில் உத்தரப்பிரதேச சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்த சேத்தன் சவுகான் 1969ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமானார். உத்தரப்பிரதேசத்தின் சிவில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் சவுகான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.