மும்பை பத்திரிகையாளர் பெயரில் போலி முகநூல் கணக்கைத் தொடங்கிய ஒடிசாவைச் சேர்ந்த 45 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அதேவேளையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தவறாகவும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவர் பெயரில் மற்றொருவர் போலியாக தங்களது கணக்கை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றும் செயலும் நடைபெறுகிறது.
அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த 31 வயதான பத்திரிகையாளர் ஒருவர் தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கைத் தொடங்கப்பட்டதை அறிந்துள்ளார். தனது பெயரிலான போலி முகநூல் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்பியதைக் கண்டறிந்த அவர் அதுகுறித்து காவல்துறையினரிடம் புகாரளிக்க முடுவெடுத்துள்ளார்.
இதனையடுத்து குறிப்பிட்ட போலியான முகநூல் கணக்கைக் குறித்து மலபார் காவல்துறையை அணுகியுள்ளார். பத்திரிகையாளரின் புகாரை விசாரணைக்கு ஏற்ற காவல்துறையினர் போலியான முகநூல் கணக்கை உருவாக்கியவரைக் கண்டறிந்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த 45 வயதான கைலாஷ் யாதவ் எனத் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்

எவ்வளவு கண்டித்தாலும் போதாது! ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்நாத் சிங்

மரண நாடகம்! உ.பி.யில் ஆதரவற்ற முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற முன்னாள் காவலர்!

மக்களவையில் 16 என்ற எண்ணைக் குறிப்பிட்டு புதிர் போட்ட ராகுல்! விடை என்ன?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


