புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீட்டின் மேல் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி: வீட்டு உரிமையாளர் கைது

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் மேல் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வீடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஆகஸ்ட் 2020, 10:17 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் மேல் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாக வீடு உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்ட ஷிப்ரா கிராமத்தில் உள்ள பாரூக்கான் தனது வீட்டின் மேல் பாகிஸ்தான் நாட்டின் கொடியை பறக்கவிட்டதாக வெளியான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் தேசியக்கொடியை ஏற்றியதாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(ஏ) சட்டத்தின் கீழ் பாரூக்கான் கைது செய்யப்பட்டார். மேலும் ஏற்றப்பட்ட பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

தனது 12 வயது மகன் விளையாட்டாய் கொடியேற்றிவிட்டார் என கைது செய்யப்பட்ட பாரூக்கான் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.