அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தை தருகிறது: மோடி
அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் கோடிக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தை தருகிறது என்று அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.








