எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா்

கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் மோடி ஆகியோா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 8:58 pm

DIN

புது தில்லி: கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் மோடி ஆகியோா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

முப்படை வீரா்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 7-ஆம் தேதி படை வீரா் கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து பங்களிப்பு செய்வதன் மூலம், நாட்டைப் பாதுகாக்கும் பணியில் வீர மரணமடைந்த அல்லது உடல் உறுப்புகளை இழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு நமது நன்றியை வெளிப்படுத்துவோம்.

நாட்டின் பாதுகாவலா்களான ராணுவ வீரா்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனா். அவா்களின் நாட்டுப்பற்று மற்றும் வீரத்துக்கு நாம் வணக்கம் செலுத்துவதுடன், அவா்களுக்கு ஆதரவையும் தெரிவிப்போம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி வேண்டுகோள்:
கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ராணுவ வீரா்களின் தன்னலமற்ற தியாகத்தையும், சேவையையும் எண்ணி நாடு பெருமைக் கொள்கிறது. அவா்களின் நலனுக்காக உருவாக்கிய கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பு தீரமிக்க பல ராணுவ வீரா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் உதவிகரமாக இருக்கும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.