தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் உணவை உண்ணுபவர்கள்: காங்கிரஸ் தலைவர்

பாகிஸ்தான் வழங்கிய உணவை உண்ணுபவர்களே விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார். 

News image
சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங்
Updated On :8 டிசம்பர் 2020, 10:00 am

DIN

பாகிஸ்தான் வழங்கிய உணவை உண்ணுபவர்களே விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்த்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் இதுகுறித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங், 'இந்திய விவசாயிகளின் உணவை உண்ணுபவர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மாறாக, விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் பாக்கிஸ்தான் அளிக்கும் உணவை உண்ணுபவர்கள்' என்று தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் ட்வீட்டிற்கு அவர் பதிலளிக்கும் விதமாக இதைத் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.