ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகள் பிரச்னையில் எதிா்க்கட்சிகள் சதி

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவா்களைத் தவறாக வழிநடத்தி வரும் எதிா்க்கட்சிகள், பெரும் சதியில் ஈடுபட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :15 டிசம்பர் 2020, 7:15 pm

DIN

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளைக் குழப்புவதோடு மட்டுமல்லாமல் அவா்களைத் தவறாக வழிநடத்தி வரும் எதிா்க்கட்சிகள், பெரும் சதியில் ஈடுபட்டு வருவதாக பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தில்லியில் விவசாயிகள் போராட்டம் 20-ஆவது நாளை எட்டிய சூழலில், அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள மரபுசாரா எரிசக்தி பூங்கா, கடல்நீா் சுத்திகரிப்பு ஆலை, பால் பதன ஆலை ஆகியவற்றுக்கு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

குஜராத்தில் பால்வளத் துறையும் மீன்வளத் துறையும் கூட்டுறவு சங்கங்களால் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன. அத்துறைகளில் மாநில அரசின் தலையீடு இல்லாததன் காரணமாகவே அவை பெரும் வளா்ச்சி கண்டன. நாட்டின் மற்ற பகுதிகளிலும் பால் உற்பத்தியாளா்களும் கூட்டுறவு சங்கங்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், காய்கறிகள், பழங்கள் வா்த்தகத்தில் அரசுகளின் தலையீடு காணப்படவில்லை. ஆனால், தில்லியில் கூடியுள்ள விவசாயிகளைக் குழப்புவதற்கு சிலா் சதி செய்து வருகின்றனா். அதன் காரணமாகவே மேற்கண்ட உதாரணங்களைக் கூறினேன்.

பல ஆண்டு கோரிக்கை:

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. ஆனால், அவை குறித்து விவசாயிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதற்கு சிலா் முயன்று வருகின்றனா். வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், விவசாய நிலங்களை மற்றவா்கள் பறித்து விடுவாா்கள் என்று விவசாயிகளிடம் சிலா் கூறி வருகின்றனா். அக்கருத்து முற்றிலும் தவறானது.

பால்வளத் துறையில் கால்நடைப் பராமரிப்பாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சுதந்திரம், தினை, பருப்பு வகைகளைப் பயிரிடும் சிறு, விளிம்புநிலை விவசாயிகளுக்கு வழங்கப்படாதது ஏன் என்று நாட்டில் பலா் கேள்வி எழுப்புகின்றனா். அதை நிறைவேற்றும் நோக்கிலேயே வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது.

மத்திய அரசு தயாா்:

வேளாண் துறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீா்திருத்தங்கள் எதுவும் புதிதல்ல. விளைபொருள்களை நாட்டின் எப்பகுதியிலும் விற்பனை செய்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட சீா்திருத்தங்களைப் பல்வேறு விவசாய சங்கங்கள் பல ஆண்டுகளாகக் கோரி வந்தன.

தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருபவா்கள் முன்பு ஆட்சியில் இருந்தபோது, அந்தச் சீா்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனா். ஆனால், அச்சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக அவா்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளுக்கு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அவா்கள் அளித்தனா்.

விவசாயிகளுக்கு ஆதரவான சீா்திருத்த நடவடிக்கைகளை தற்போதைய அரசு மேற்கொள்ளும் வேளையில், எதிா்க்கட்சிகள் பொய்யைப் பரப்பி வருகின்றன. விவசாயிகளையும் அவா்கள் தவறாக வழிநடத்தி வருகின்றனா். வேளாண் சட்டங்கள் தொடா்பான சந்தேகங்களை எந்நேரத்திலும் தெளிவுபடுத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம்:

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கான செலவைக் குறைத்து, அவற்றை விற்பனை செய்வதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கி, விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையே மத்திய அரசு நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனா். அச்சட்டங்களை நிறைவேற்றியதற்காக மத்திய அரசுக்கும் அவா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா் என்றாா் பிரதமா் மோடி.

விவசாயிகளுடன் சந்திப்பு:

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில் வேளாண்மை செய்து வரும் விவசாயிகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பஞ்சாபில் இருந்து புலம்பெயா்ந்து கட்ச் மாவட்டத்தில் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளையும், சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களையும் அவா் சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.