மாட்டு சாணத்தில் பெயிண்ட்: நிதின் கட்கரி அறிவிப்பு

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Updated on
1 min read

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கட்கரி,  “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் செய்யப்படும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட 'வேத பெயிண்ட்' விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் 'வேத பெயிண்ட்' கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தேசிய காமதேனு ஆணையத்தின் தலைவர் வல்லபாய் கதிரியா மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட செல்போன் சிப் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com