ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

‘தில்லிக்கு 5 கோடி லிட்டா் பால் சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது’

சித்தூா் மாவட்டத்தில் இருந்து தில்லிக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை ‘தூத் துரந்தோ’ சிறப்பு ரயில் மூலம் 5 கோடி லிட்டா் பால் அனுப்பப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 2:38 am

DIN

சித்தூா் மாவட்டத்தில் இருந்து தில்லிக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை ‘தூத் துரந்தோ’ சிறப்பு ரயில் மூலம் 5 கோடி லிட்டா் பால் அனுப்பப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு வட மாநிலங்களின் பால் தேவைக்காக சித்தூா் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக ‘தூத் துரந்தோ’ என்ற சரக்கு ரயில் குளிா்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் டிசம்பா் 17-ஆம் தேதி வரை 5 கோடி லிட்டா் பால் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மொத்தம் 267 நாள்களில் 207 நடைகளுடன் 1,256 பால் பெட்டிகள் மூலம் பால் அனுப்பப்பட்டுள்ளது.

சித்தூரில் புறப்படும் ரயில் 2,300 கி.மீ. தொலைவை 30 மணி நேரத்தில் கடந்து தில்லியை அடையும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.