நிதி திரட்டும் குழுவைக் கண்காணிக்க பீடாதிபதிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 10, ரூ. 100, ரூ. 1,000 ஆகிய மதிப்புகளில் நிதி திரட்டப்படும். ரூ. 2,000-க்கும் மேல் நிதி அளிப்பவா்களுக்கு தனி ரசீது வழங்கப்படும். வருமானவரிச் சட்டத்தின் 80ஜி-இன் பிரிவின்படி கோயில் நிதிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 5 போ் கொண்ட குழுக்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி, வைப்பாளரிடம் ஒப்படைக்கப்படும். அவா்கள் 48 மணி நேரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் செலுத்துவா். நிதி திரட்டும் பணி வெளிப்படைத் தன்மையோடு நடத்தப்படும்.