கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பேச்சுவார்த்தைக்குத் தயார்; திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: விவசாயிகள்

​மத்திய அரசு அர்த்தமற்ற திருத்தங்களைக் கொண்டுவரக் கூடாது என்றும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:09 pm

DIN


மத்திய அரசு அர்த்தமற்ற திருத்தங்களைக் கொண்டுவரக் கூடாது என்றும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

போராடும் விவசாயிகள் சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது விவசாயத் தலைவர் ஒருவர் தெரிவிக்கையில், "நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். அதற்கு, உறுதியான ஒரு முன்மொழிவுடன் அரசு வர வேண்டும்" என்றார்.

விவசாயத் தலைவர் ஷிவ் குமார் தெரிவிக்கையில், "சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம்" என்றார்.

ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் பேசுகையில், "அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்கள் தயாராக உள்ளன. அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு வருவதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள்" என்றார்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விவசாயிகளை சோர்வடைய வைக்க அரசு நினைக்கிறது என மற்றொரு விவசாயத் தலைவர் தெரிவித்தார்.

விவரம்:

விவசாயிகள் விளை பொருள்களை விரும்பிய முதலீட்டாளர்களிடம், விரும்பிய விலைக்கு விற்பனை செய்யும் வகையிலும், முதலீடுகளை ஈர்க்க வழி செய்யும் வகையிலும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது.

இந்த புதிய சட்டங்களால், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய நடைமுறை ரத்து ஆவதாகவும், எனவே இந்த புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.