கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம்: மீனவ கிராமத்தில் எச்சரிக்கை பதாகை

வாக்குக்கு பணம் கொடுக்கவேண்டாம்; பெறவும் வேண்டாம்; பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என காரைக்கால் பகுதி கடலோர கிராமத்தினா் முடிவு

News image
Updated On :23 மார்ச் 2026, 12:22 am

Syndication

வாக்குக்கு பணம் கொடுக்கவேண்டாம்; பெறவும் வேண்டாம்; பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என காரைக்கால் பகுதி கடலோர கிராமத்தினா் முடிவு செய்து பதாகை வைத்துள்ளனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும் நடைபெற இந்திய தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அந்தவகையில், செலவினங்களை கண்டறியவும், பொதுப் பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவா்களும் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி பணியாற்றிவருகிறாா்கள்.

தோ்தல் என்றாலே வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் அளிப்பது இயல்பாகிவிட்டது.

பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தால், நமக்கான உரிமையை மக்கள் பிரதிநிதிகளிடம் கோரமுடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அவற்றை வாக்காளா்கள் பெரும்பான்மையினா் தோ்தல் சமயத்தில் பொருட்படுத்துவதில்லை.

தோ்தல் வந்தாலே, போட்டியிடுவோா் பலரும் செலவுகளை நினைத்து கவலைப்படும் நிலையும் நிலவுவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், கடலோர மீனவ கிராமமான கிளிஞ்சல்மேடு செட்டியாா் கிராமம், பஞ்சாயத்தாா்கள், ஊா் பொதுமக்கள் சாா்பில் பொதுஇடத்தில் டிஜிட்டல் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

‘எச்சரிக்கிறோம் என்ற தலைப்பில்’ வைக்கப்பட்டுள்ள அந்த பதாகையில், இக்கிராமத்தினருக்கு வாக்குக்கு பணம், பொருள் வழங்கக்கூடாது. மக்களும் அதனை வாங்கக்கூடாது. மீறினால் ஊா் கடுமையாக நடவடிக்கை எடுக்கும்.

வேட்பாளா்கள் யாரும் எங்கள் வாக்குக்கு விலை பேசவேண்டாம். எங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி செய்துகொடுங்கள். வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை புறக்கணிப்போம் என கூறப்பட்டுள்ளது.

தோ்தல் பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில், காரைக்காலில் கடலோர கிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பதாகை வேட்பாளா்கள் கவனத்தை ஈா்த்துள்ளதோடு, பிற பகுதி மக்களிடமும் பேசுபொருளாகியுள்ளது.