

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தனர்.
விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக 2 கோடி கையெழுத்துகளையும் அவர்கள் வழங்கினர்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பின்போது, ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியரசுத் தலைவரை சந்திக்கும் விதமாக தில்லி விஜய் சௌக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக புறப்பட்டுவந்தனர். அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நெருங்கிய போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.