தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர் என்று தேர்தல் ஆணைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநில பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில் இருகட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய உள்ள வாக்காளர் விவரம் தேர்தல் ஆணைய தரவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
100 வயது மற்றும் அதற்கும் மேல் உள்ள வாக்காளர்கள் 2,530 பேர்
85 வயது - 100 வயது வரையுள்ள வாக்காளர்கள் 4 லட்சம் பேர்
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.63 லட்சம் பேர்
20 - 29 வயது பருவத்திலுள்ள வாக்காளர்கள் 1.05 கோடி பேர்
சேவைப் பணியாளர் வாக்காளர்கள் 67,056 பேர்
ஆண் வாக்காளர்கள் - 2.77 கோடி பேர்
பெண் வாக்காளர்கள் - 2.89 கோடி பேர்
மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் - 7617 பேர்
மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் என்று தேர்தல் ஆணைய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.
Summary
TamilNadu : Chief Election Commissioner Gyanesh Kumar says, the category of our electors
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










