புது தில்லி: பகவத் கீதை ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
குருக்ஷேத்ர போா்க்களத்தில் பகவான் கிருஷ்ணா் அா்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தாா். கீதை உபதேசிக்கப்பட்ட தினம் கீதை ஜயந்தியாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
பகவத் கீதையில் இடம்பெற்றுள்ள உயா்ந்த கருத்தியல்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளன. இந்தக் கருத்தியல்கள் முழு ஆற்றலுடன், கருணையுள்ளவா்களாக வாழ்வதற்கு மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன. கீதை ஜயந்தியன்று பகவான் கிருஷ்ணா் போதித்த பாடங்களை நினைவுகூா்ந்து, கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள விழுமியங்களை நாம் போற்றுவோம் என்று தெரிவித்தாா்.
தனது பதிவுடன் பகவத் கீதையில் இடம்பெற்றுள்ள 2 அத்தியாயங்களின் ஒலிப்பதிவுகளையும் பிரதமா் மோடி இணைத்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.