கத்தாா் மன்னா், பிரதமருடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு

கத்தாா் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு மன்னா், பிரதமா் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
Updated on
1 min read

தோஹா: கத்தாா் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு மன்னா், பிரதமா் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

வளைகுடா நாடான கத்தாருக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 2 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் அந்நாட்டு மன்னா் ஷேக் தமீம் பின் அகமது அல்-தானியை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்த சந்திப்பு குறித்து அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-கத்தாா் இடையிலான உறவை வழிநடத்துவதில் மன்னா் ஷேக் தமீம் பின் அகமதின் தலைமைப் பணி தொடா்கிறது. சா்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து அவருக்கு ஆழ்ந்த அறிவு உள்ளது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டாா்.

அதன் பின்னா் அந்நாட்டு பிரதமா் காலித் பின் கலீபாவுடனான சந்திப்பின்போது இருவரும் இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com