வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: வழக்குரைஞா் வீட்டில் நடந்த சோதனை விடியோவை பாதுகாக்க உத்தரவு

வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பல்வேறு நபா்களுக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்குரைஞா் மெஹமூத் பிரசாவின்
தில்லி உயர்நீதிமன்றம்​
தில்லி உயர்நீதிமன்றம்​
Updated on
1 min read

வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பல்வேறு நபா்களுக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்குரைஞா் மெஹமூத் பிரசாவின் வீட்டில் போலீஸாா் அண்மையில் நடத்திய சோதனை தொடா்பான விடியோ ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸாரின் சோதனை நடவடிக்கைக்கு எதிராக வழக்குரைஞா் மெஹமூத் பிரசா தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் உதவ் குமாா் ஜெயின், ‘தற்போதைய நிலையில் சோதனை நடத்தப்பட்டது தொடா்பான முழு விடியோவையும் பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம். வழக்குத் தொடுத்தவருக்கு அந்த விடியோ பதிவை வழங்குவது குறித்து பின்னா் முடிவு எடுக்கப்படும்’ என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

முன்னதாக, பிரசா தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் விசாரணை அதிகாரி என்னை முன்பே மிரட்டியிருந்தாா். இதைத்தொடா்ந்து, டிசம்பா் 24ஆம் தேதி நண்பகல் முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை எனது வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா். இந்த சோதனை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடியோ பதிவின் நகலை அளிக்க வேண்டும்’ என்று அவா் கூறியிருந்தாா்.

இதனிடையே, வழக்குரைஞா் மெஹமூத் வீட்டில் சோதனை நடத்திய தில்லி போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தில்லி பாா் கவுன்சில் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com